"1400 குடும்பங்களின் கண்ணீரை துடையுங்கள்" : மு.க.ஸ்டாலினிற்கு கோரிக்கை(Photo)
“தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின், தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடியாளர்களை நாடு கடத்தி எமது 1400 குடும்பங்களின் கண்ணீரை துடையுங்கள்” என பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தின் நிதி மோசடி தொடர்பாக விசேட செய்தியாளர் மாநாடு கல்முனை தனியார் மண்டபத்தில் நேற்று(6) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாதிக்கப்பட்டவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
மக்களின் கோரிக்கை
மேலும் கருத்து தெரிவிக்கையில், “தமிழ் நாட்டிலும் தமிழ் நாட்டிற்கு வெளியிலும் எமக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கின்ற மு.க.ஸ்டாலின், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனம் என்ற பெயரில் 200 கோடி ரூபாவினை மோசடி செய்துள்ளனர்.

இந்த மோசடிகாரர்கள் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தப்பி சென்று, தற்போது திருச்சி சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
சிஹாப் சரீப் மற்றும் அவரது மனைவி பர்சானா மார்க்கார் இருவருமே இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது விசாரணைகள் அனைத்தும் அங்கு நிறைவு பெற்றிருப்பதாக நாம் அறிகின்றோம். இதற்கு காரணம் இந்தியா தமிழ் நாட்டுடன் நாம் நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளோம்.

மேலும் 1400 குடும்பங்கள் இவர்களது நிதி நிறுவனத்தில் பண வைப்பு செய்து ஏமாற்றப்பட்டுள்ளார்கள். தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மிக சிரமங்களை நாம் எதிர்கொள்கின்றோம்.
அத்துடன் பொருளாதார நெருக்கடியான இக்கட்டான சூழலில் எமது நாட்டிற்கு பல்வேறு உதவிகள் செய்து எமது மனங்களில் தற்போது இடம்பிடித்துள்ளீர்கள்.
நிதி மோசடி
நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த இந்த நிதி நிறுவனம் கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் உள்ளடங்களாக கிளைகளை ஆரம்பித்து இஸ்லாத்தை முன்னிறுத்தி சில மௌலவிகளின் ஆசிர்வாதத்துடன் எமது மக்களை ஏமாற்றியுள்ளனர்.

சர்வேதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மோசடியாளர்களை உங்கள் நாட்டில் தடுத்து வைத்துள்ளார்கள்.எனவே இவர்களை எமது நாட்டிற்கு நாடு கடத்தி எமது 1400 குடும்பங்களின் கண்ணீரை துடையுங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த விடயம் குறித்து ஜனாதிபதி அடங்கலாக அரசின் முக்கியஸ்தர்கள் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட அமைப்பின் தலைவர் ஏ.றிஸ்வாட், செயலாளர் ஏ.றஸாக், உப தலைவர் ஐ.எம். பர்ஸாத் பொருலாளர் எம்.ஐ.எம் வகீல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan