பலத்த பாதுகாப்புடன் சற்றுமுன்னர் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட விமல் வீரவன்ச
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, சற்றுமுன்னர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
இதன்படி, அவரை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ வெற்றி கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் தலங்கம பொலிஸ் நிலையத்தில் அவர் முன்னிலைன நிலையில், இன்று (25) காலை கைது செய்யப்பட்டிருந்தார்.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
போர் வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை அவர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக இலங்கை தண்டனைச் சட்டத்தின் 344-வது பிரிவின்படி அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலே அவர் கைது செய்யப்பட்டு கடுவலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலங்கம பொலிஸாரால் சற்றுமுன்னர் ( 25) கைது செய்யப்பட்டுள்ளார்.
போர் வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் இன்று காலை அவர் முன்னிலையாகியிருந்தார்.
வாக்குமூலங்கள் பதிவு
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் அவர் கைது செய்ய்ப்பட்டுள்ளார்.

கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுத்தூபியில் போர் வெற்றி நாள் இறுதி ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது வீரவன்ச தலைமையிலான சுமார் 35 பேரடங்கிய குழுவினர் சென்று கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருடன் முரண்பட்டிருந்தனர்.
இதன்போது மே 19ஆம் திகதி நடைபெறவிருந்த போர் வெற்றி நாள் ஒத்திகை நடவடிக்கைகளுக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கும் இடையூறு விளைவித்து, தடை செய்யப்பட்ட பகுதிக்குள் பலவந்தமாக நுழைய முயன்ற நிலையில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.
பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு
பதற்றமான சூழ்நிலை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றைய தினம் தலாங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு வீரவன்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்ய்ப்பட்டுள்ளார்.
.