தங்க அடகுக் கடன் தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
தங்கக் கடன்களுக்கான அதிகபட்ச கடன் மற்றும் மதிப்பு விகிதத்தை 70 சதவீதமாக குறைக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையின் நிதித் தொகுதியின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதையும் அபாய மேலாண்மையையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 105(1) பிரிவின்படி, நிதி மேற்பார்வை அதிகாரியாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்கவின் கையொப்பத்துடன் இந்த புதிய அறிவுறுத்தல் கோவை வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (2026 மே 25) முதல் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம் பெற்ற விசேட வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் இந்த விதியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் புதிதாக வழங்கப்படும் தங்கக் கடன்கள் மற்றும் புதுப்பிக்கப்படும் தங்கக் கடன்கள் ஆகிய அனைத்திற்கும் இந்த 70% அதிகபட்ச எல்லை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடகு வைக்கும் வசதிகள், தங்கக் கடன்கள் மற்றும் தங்கத்தை பிணையாக வைத்து வழங்கப்படும் வேறு எந்தவொரு கடன் அல்லது நிதி வசதிகளும் இந்த புதிய உத்தரவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
தங்கத்தின் மதிப்பாக அதன் தற்போதைய சந்தை மதிப்பே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன் வழங்கப்படும் நேரத்தில் செய்யப்படும் மதிப்பீடானது, பிணையாக வைக்கப்படும் தங்கத்தின் துல்லியமான மற்றும் நியாயமான மதிப்பை பிரதிபலிக்கிறது என்பதை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தை மதிப்பிடுவதற்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் விவேகமான நடைமுறைகளை (Prudent Practices) தொடர்ந்து பின்பற்றுமாறும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிதி நிறுவனங்களின் கடன் வழங்கும் தரத்தை வலுப்படுத்துவதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த நிதித் தொகுதியின் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும் என மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள்
புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்
அடுத்துவரும் 3 நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri