மீண்டும் பாடசாலைகள் மூடப்படுமா? கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் நிலவும் கோவிட் நிலையை அடுத்து பாடசாலைகளை மீண்டும் மூடிவைப்பதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலையில் கோவிட் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால் இதற்கு முன்னர் இருந்த முறையில் அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவுகள் அறிவித்துள்ளது.
அதற்கமையவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் பாடசாலை கட்டமைப்பினை முழுமையாக மூடுவதற்கான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.
தற்போதுவரையிலும் கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் பாடசாலை மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். எனினும் பாடசாலை ரீதியாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam