காட்டுச் சட்டங்களால் நாட்டை ஆள முடியாது: சஜித் சுட்டிக்காட்டு(Photo)
"ஒரு நாட்டை காட்டுச் சட்டங்களால் ஆள முடியாது. அதற்காக ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்." என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தள்ளார்.
சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தரப்பு பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தலைவர்களுடன் நேற்று(27) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கருத்து


இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,"ஜனநாயக ரீதியான வெற்றிக்காக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயுள்ள பரப்புகளிலும் தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதன் ஊடாக மக்களுக்கான வெற்றிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

குறிப்பாக 21 ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் ஊடாக ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதே தமது ஒரே நோக்கமாகும்.” என தெரிவித்துள்ளார்.
உறுதிமொழி

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தரப்பினரும் எதிர்க்கட்சி தலைவரிடம் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளனர்.
குறித்த சகல முன்மொழிவுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

| அமைச்சு பதவியை துறக்க தயார்: சஜித்திடம் சவால்விடும் ஹரின் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan