ரிஷாட் பதியுதீன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச

Dr Wijeyadasa Rajapakshe Risad Badhiutheen Sri Lanka
By Harrish Dec 04, 2023 07:19 PM GMT
Report

தனது அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணையில் இருந்து விலகிய முஸ்லிம் நீதியரசரை சபிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது. ஆகவே அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (04.12.2023) இடம்பெற்ற அமர்வின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை விமான நிலையம் : அவதியுறும் பயணிகள் (Video)

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை விமான நிலையம் : அவதியுறும் பயணிகள் (Video)

நீதியரசரை சபிப்பதாக

“நீதியமைச்சின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனது வழக்கு விவகாரத்தை குறிப்பிட்டு 'நீதியரசரை சபிப்பதாக' குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் நவாஸ் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். அவர் ஒருபோதும் மதத்தை முன்னிலைப்படுத்தி நீதிபதியாக சேவையாற்றவில்லை. கௌரவமான முறையில் சேவையாற்றுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முதலாவதாக நீதியரசர் ஜனக் த சில்வா விலகினார்.

ரிஷாட் பதியுதீன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapakshe Today Parliament Speech

வில்பத்து காடழிப்பு விவகாரத்தில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இவர் தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கில் இருந்து விலகியிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

அதேபோல் இரண்டாவதாக நீதியரசர் சமேவர்தன தனிப்பட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி வழக்கில் இருந்து விலகினார். மூன்றாவதாக நீதியரசர் யசந்த கோடாகொட வழக்கில் இருந்து விலகினார். இவர் விலகியதற்கான காரணத்தை நான் குறிப்பிட விரும்பவில்லை. காரணத்தை குறிப்பிட்டால் அது ரிஷாட் பதியுதீனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இறுதியாக நீதியரசர் ஏ.எச்.நவாஸ் முன்னிலையில் இவரது அடிப்படை உரிமை மீறல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரும் வழக்கில் இருந்து விலகினார். விலகுவதற்கான காரணத்தை அவர் குறிப்பிவில்லை.இவர் மீது முன்வைக்கப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டை தொடர்ந்து நான் அவ்விடயத்தை ஆராய்ந்து பார்த்தேன்.

ரிஷாட் பதியுதீன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapakshe Today Parliament Speech

அடிப்படை உரிமை மீறல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்தினம் இரவு இந்த வழக்கில் முன்னிலையாகிய கனிஷ்ட சட்டத்தரணி ஒருவர் நீதிபதிக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு 'உங்கள் முன்னிலையில் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் சிரேஷ்ட சட்டத்தரணிக்கு உண்டு' என குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் மறுநாள் காலையில் சிரேஷ்ட சட்டத்தரணி தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு 'இந்த வழக்கில் முன்னிலையாக வேண்டாம்' என்று நீதியரசர் நவாஸிடம் குறிப்பிட்டுள்ளார். இதனை நீதியரசர் நவாஸ் பிரதம நீதியரசரிடம் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னரே அவர் வழக்கு விசாரணையில் இருந்து விலகினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நீதியரசர் நவாஸ் தொடர்பில் குறிப்பிட்ட கருத்து பாரதூரமானது. முஸ்லிம்களுக்காக இவர் முன்னிலையாகுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapakshe Today Parliament Speech

நீதியரசர் நவாஸ் தொடர்பில் இவர் எமக்கு கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. நீதியரசர் நவாஸிற்கு எதிராக நான் பல வழக்குகளில் முன்னிலையாகியுள்ளேன். அவர் இனவாதத்தை தோளில் சுமந்துக் கொண்டு செல்லவில்லை. நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு நீதிபதிகளை விமர்சித்து, சபித்தால் எவ்வாறு சட்டத்துறையும், நீதித்துறையும் இணக்கமாக செயற்பட முடியும்.

நீதியரசர் நவாஸ் ராஜபக்சர்களின் வழக்குகளுக்கு முன்னிலையாகுவதாகவும் இவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜபக்சர்களுக்கு சாதகமாகவும், எதிராகவும் வழங்கப்பட்டுள்ள வழக்கு தீர்ப்புகளில் நீதியரசர் நவாஸ் முன்னிலையாகவில்லை. ராஜபக்சர்களின் நிழலில் இருந்துக் கொண்டு ரிஷாட் பதியுதீன் 10 ஆண்டுகாலமாக அரசியல் செய்து அமைச்சு பதிவிகளை வகிக்கும் போது எவரும் சபிக்கவில்லை. 

ரிஷாட் பதியுதீன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapakshe Today Parliament Speech

ஆனால் தற்போது நீதியரசர் அவர்களின் வழக்குகளுக்கு முன்னிலையாகியதாக குறிப்பிட்டு சபிக்கிறார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அந்த நீதியரசரிடம் நாடாளுமன்றத்தின் ஊடாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். ஏனெனில் இது பாரதூரமானது ” என தெரிவித்துள்ளார்.

14 வயது சிறுவனிடமிருந்து பறிக்கப்பட்ட உயிர் : சாணக்கியன் ஆவேசம் (Video)

14 வயது சிறுவனிடமிருந்து பறிக்கப்பட்ட உயிர் : சாணக்கியன் ஆவேசம் (Video)

யாழில் அதிகரித்துள்ள டெங்கு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிகரித்துள்ள டெங்கு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US