ரிஷாட் பதியுதீன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச

Dr Wijeyadasa Rajapakshe Risad Badhiutheen Sri Lanka
By Harrish Dec 04, 2023 07:19 PM GMT
Report

தனது அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணையில் இருந்து விலகிய முஸ்லிம் நீதியரசரை சபிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது. ஆகவே அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (04.12.2023) இடம்பெற்ற அமர்வின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை விமான நிலையம் : அவதியுறும் பயணிகள் (Video)

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை விமான நிலையம் : அவதியுறும் பயணிகள் (Video)

நீதியரசரை சபிப்பதாக

“நீதியமைச்சின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனது வழக்கு விவகாரத்தை குறிப்பிட்டு 'நீதியரசரை சபிப்பதாக' குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் நவாஸ் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். அவர் ஒருபோதும் மதத்தை முன்னிலைப்படுத்தி நீதிபதியாக சேவையாற்றவில்லை. கௌரவமான முறையில் சேவையாற்றுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முதலாவதாக நீதியரசர் ஜனக் த சில்வா விலகினார்.

ரிஷாட் பதியுதீன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapakshe Today Parliament Speech

வில்பத்து காடழிப்பு விவகாரத்தில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இவர் தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கில் இருந்து விலகியிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

அதேபோல் இரண்டாவதாக நீதியரசர் சமேவர்தன தனிப்பட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி வழக்கில் இருந்து விலகினார். மூன்றாவதாக நீதியரசர் யசந்த கோடாகொட வழக்கில் இருந்து விலகினார். இவர் விலகியதற்கான காரணத்தை நான் குறிப்பிட விரும்பவில்லை. காரணத்தை குறிப்பிட்டால் அது ரிஷாட் பதியுதீனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இறுதியாக நீதியரசர் ஏ.எச்.நவாஸ் முன்னிலையில் இவரது அடிப்படை உரிமை மீறல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரும் வழக்கில் இருந்து விலகினார். விலகுவதற்கான காரணத்தை அவர் குறிப்பிவில்லை.இவர் மீது முன்வைக்கப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டை தொடர்ந்து நான் அவ்விடயத்தை ஆராய்ந்து பார்த்தேன்.

ரிஷாட் பதியுதீன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapakshe Today Parliament Speech

அடிப்படை உரிமை மீறல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்தினம் இரவு இந்த வழக்கில் முன்னிலையாகிய கனிஷ்ட சட்டத்தரணி ஒருவர் நீதிபதிக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு 'உங்கள் முன்னிலையில் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் சிரேஷ்ட சட்டத்தரணிக்கு உண்டு' என குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் மறுநாள் காலையில் சிரேஷ்ட சட்டத்தரணி தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு 'இந்த வழக்கில் முன்னிலையாக வேண்டாம்' என்று நீதியரசர் நவாஸிடம் குறிப்பிட்டுள்ளார். இதனை நீதியரசர் நவாஸ் பிரதம நீதியரசரிடம் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னரே அவர் வழக்கு விசாரணையில் இருந்து விலகினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நீதியரசர் நவாஸ் தொடர்பில் குறிப்பிட்ட கருத்து பாரதூரமானது. முஸ்லிம்களுக்காக இவர் முன்னிலையாகுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapakshe Today Parliament Speech

நீதியரசர் நவாஸ் தொடர்பில் இவர் எமக்கு கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. நீதியரசர் நவாஸிற்கு எதிராக நான் பல வழக்குகளில் முன்னிலையாகியுள்ளேன். அவர் இனவாதத்தை தோளில் சுமந்துக் கொண்டு செல்லவில்லை. நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு நீதிபதிகளை விமர்சித்து, சபித்தால் எவ்வாறு சட்டத்துறையும், நீதித்துறையும் இணக்கமாக செயற்பட முடியும்.

நீதியரசர் நவாஸ் ராஜபக்சர்களின் வழக்குகளுக்கு முன்னிலையாகுவதாகவும் இவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜபக்சர்களுக்கு சாதகமாகவும், எதிராகவும் வழங்கப்பட்டுள்ள வழக்கு தீர்ப்புகளில் நீதியரசர் நவாஸ் முன்னிலையாகவில்லை. ராஜபக்சர்களின் நிழலில் இருந்துக் கொண்டு ரிஷாட் பதியுதீன் 10 ஆண்டுகாலமாக அரசியல் செய்து அமைச்சு பதிவிகளை வகிக்கும் போது எவரும் சபிக்கவில்லை. 

ரிஷாட் பதியுதீன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapakshe Today Parliament Speech

ஆனால் தற்போது நீதியரசர் அவர்களின் வழக்குகளுக்கு முன்னிலையாகியதாக குறிப்பிட்டு சபிக்கிறார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அந்த நீதியரசரிடம் நாடாளுமன்றத்தின் ஊடாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். ஏனெனில் இது பாரதூரமானது ” என தெரிவித்துள்ளார்.

14 வயது சிறுவனிடமிருந்து பறிக்கப்பட்ட உயிர் : சாணக்கியன் ஆவேசம் (Video)

14 வயது சிறுவனிடமிருந்து பறிக்கப்பட்ட உயிர் : சாணக்கியன் ஆவேசம் (Video)

யாழில் அதிகரித்துள்ள டெங்கு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிகரித்துள்ள டெங்கு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கிளிநொச்சி

02 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நாரந்தனை, நீர்கொழும்பு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US