ரிஷாட் பதியுதீன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச

Dr Wijeyadasa Rajapakshe Risad Badhiutheen Sri Lanka
By Harrish Dec 04, 2023 07:19 PM GMT
Report

தனது அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணையில் இருந்து விலகிய முஸ்லிம் நீதியரசரை சபிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது. ஆகவே அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (04.12.2023) இடம்பெற்ற அமர்வின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை விமான நிலையம் : அவதியுறும் பயணிகள் (Video)

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை விமான நிலையம் : அவதியுறும் பயணிகள் (Video)

நீதியரசரை சபிப்பதாக

“நீதியமைச்சின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனது வழக்கு விவகாரத்தை குறிப்பிட்டு 'நீதியரசரை சபிப்பதாக' குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் நவாஸ் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். அவர் ஒருபோதும் மதத்தை முன்னிலைப்படுத்தி நீதிபதியாக சேவையாற்றவில்லை. கௌரவமான முறையில் சேவையாற்றுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முதலாவதாக நீதியரசர் ஜனக் த சில்வா விலகினார்.

ரிஷாட் பதியுதீன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapakshe Today Parliament Speech

வில்பத்து காடழிப்பு விவகாரத்தில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இவர் தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கில் இருந்து விலகியிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

அதேபோல் இரண்டாவதாக நீதியரசர் சமேவர்தன தனிப்பட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி வழக்கில் இருந்து விலகினார். மூன்றாவதாக நீதியரசர் யசந்த கோடாகொட வழக்கில் இருந்து விலகினார். இவர் விலகியதற்கான காரணத்தை நான் குறிப்பிட விரும்பவில்லை. காரணத்தை குறிப்பிட்டால் அது ரிஷாட் பதியுதீனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இறுதியாக நீதியரசர் ஏ.எச்.நவாஸ் முன்னிலையில் இவரது அடிப்படை உரிமை மீறல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரும் வழக்கில் இருந்து விலகினார். விலகுவதற்கான காரணத்தை அவர் குறிப்பிவில்லை.இவர் மீது முன்வைக்கப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டை தொடர்ந்து நான் அவ்விடயத்தை ஆராய்ந்து பார்த்தேன்.

ரிஷாட் பதியுதீன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapakshe Today Parliament Speech

அடிப்படை உரிமை மீறல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்தினம் இரவு இந்த வழக்கில் முன்னிலையாகிய கனிஷ்ட சட்டத்தரணி ஒருவர் நீதிபதிக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு 'உங்கள் முன்னிலையில் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் சிரேஷ்ட சட்டத்தரணிக்கு உண்டு' என குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் மறுநாள் காலையில் சிரேஷ்ட சட்டத்தரணி தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு 'இந்த வழக்கில் முன்னிலையாக வேண்டாம்' என்று நீதியரசர் நவாஸிடம் குறிப்பிட்டுள்ளார். இதனை நீதியரசர் நவாஸ் பிரதம நீதியரசரிடம் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னரே அவர் வழக்கு விசாரணையில் இருந்து விலகினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நீதியரசர் நவாஸ் தொடர்பில் குறிப்பிட்ட கருத்து பாரதூரமானது. முஸ்லிம்களுக்காக இவர் முன்னிலையாகுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapakshe Today Parliament Speech

நீதியரசர் நவாஸ் தொடர்பில் இவர் எமக்கு கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. நீதியரசர் நவாஸிற்கு எதிராக நான் பல வழக்குகளில் முன்னிலையாகியுள்ளேன். அவர் இனவாதத்தை தோளில் சுமந்துக் கொண்டு செல்லவில்லை. நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு நீதிபதிகளை விமர்சித்து, சபித்தால் எவ்வாறு சட்டத்துறையும், நீதித்துறையும் இணக்கமாக செயற்பட முடியும்.

நீதியரசர் நவாஸ் ராஜபக்சர்களின் வழக்குகளுக்கு முன்னிலையாகுவதாகவும் இவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜபக்சர்களுக்கு சாதகமாகவும், எதிராகவும் வழங்கப்பட்டுள்ள வழக்கு தீர்ப்புகளில் நீதியரசர் நவாஸ் முன்னிலையாகவில்லை. ராஜபக்சர்களின் நிழலில் இருந்துக் கொண்டு ரிஷாட் பதியுதீன் 10 ஆண்டுகாலமாக அரசியல் செய்து அமைச்சு பதிவிகளை வகிக்கும் போது எவரும் சபிக்கவில்லை. 

ரிஷாட் பதியுதீன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapakshe Today Parliament Speech

ஆனால் தற்போது நீதியரசர் அவர்களின் வழக்குகளுக்கு முன்னிலையாகியதாக குறிப்பிட்டு சபிக்கிறார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அந்த நீதியரசரிடம் நாடாளுமன்றத்தின் ஊடாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். ஏனெனில் இது பாரதூரமானது ” என தெரிவித்துள்ளார்.

14 வயது சிறுவனிடமிருந்து பறிக்கப்பட்ட உயிர் : சாணக்கியன் ஆவேசம் (Video)

14 வயது சிறுவனிடமிருந்து பறிக்கப்பட்ட உயிர் : சாணக்கியன் ஆவேசம் (Video)

யாழில் அதிகரித்துள்ள டெங்கு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிகரித்துள்ள டெங்கு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US