அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அலுவலகத்திற்கு திடீர் வியஜம் மேற்கொண்ட விஜேதாச ராஜபக்ச
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
நேற்று (15.03.2023) மாலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச திணைக்களத்தின் அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்.
இதற்கமைய திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்றிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு திடீர் விஜயம்
ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் நீதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களம் தொடர்பில் அவர் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.