இத்தாலியில் வீடொன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட அனர்த்தம்! ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இலங்கையர்
இத்தாலியின் போர்கோ ரோமா பகுதியில் உள்ள via Polesella பகுதியில், இடம்பெற்ற தீவிபத்தில் இலங்கையர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இரண்டு அடுக்குமாடி வீடு தீப்பற்றியதை அடுத்து, தனது அறையிலிருக்கும் நண்பருடன் வசித்து வந்த இலங்கையர் தீ விபத்தில் சிக்கியுள்ளார்.
இந்த தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து
தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்ட 40 வயதுடைய இலங்கையர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து தீயணைப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் தரைத்தளத்திலேயே தீ பரவியுள்ளதுடன், தீ அடுக்குமாடி குடியிருப்பு முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது.
மேலதிக விசாரணை
எனினும் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது உடனடியாக விரைந்த தீயணைப்புப் படையினர் Cadidavid பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
YOU MAY LIKE THIS VIDEO