கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தமை ஏன்? பொலிஸார் வெளியிட்ட தகவல்
இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத் தொகுதியின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான ஆய்வகங்கத்தின் முகாமைத்துவ உதவியாளராக அவர் செயற்பட்டு வந்துள்ளார்.
உயிரிழந்த பெண் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான மினுலி எரந்தி சொய்ஸா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த பெண் மன ரீதியான பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
சிகிச்சை பெறுவதற்காக 2 மாதங்கள் விடுமுறை பெற்று வீடு சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுமுறையை நிறைவு செய்து பணியிடத்திற்கு திரும்பிய பெண் இவ்வாறு பல்கலைக்கழக கட்டடத்தில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.
அத்துடன் தான் பணியாற்றும் அந்த பிரிவில் இருந்து வேறு பிரிவிற்கு இடமாற்றம் ஒன்று வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது கோரிக்கைக்கமைய அவருக்கு இடமாற்றமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள கல்கிஸ்ஸ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri