விடுதலைப் புலிகளின் தலைவரை விட அதிகமாக தாக்குதலுக்கு உள்ளான நபர் நானே! அமைச்சர் வெளியிட்ட தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட பொதுமக்களிடத்தில் நானே அதிக தாக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
எனது உருவ பொம்மைகள் அதிகளவில் எரிக்கப்பட்டுள்ளன, பிரபாகரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் உருவ பொம்மைகள் கூட இவ்வாறு இதுவரை எரிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
செயற்கை உரம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
இதன்போது, நடத்தப்பட்ட போராட்டங்களில் எனது உருவ பொம்மைகளை விவசாயிகள் எரித்தனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.