அநுர அரசின் புதிய சட்டத்தால் நெருக்கடி! பலர் கைது
பயங்கர வாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கூறி, ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம், தற்போது புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்காக வரைபை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(30.01.2026) கொழும்பு - நீதி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
எனினும் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் பலர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பயங்கர வாத தடைச்சட்டத்தின் மூலம் 90 நாட்கள் தடுத்து வைக்கலாம், ஆனால் இந்த புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் மூலம் 1 வருடத்திற்கு தடுத்து வைக்க முடியும் என்று கூறப்படுகின்றது.
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு ( PTA) பதிலாக கொண்டுவரப்பட உள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு (PSTA) தொடர்ந்தும் பாதுகாப்பு துறையினருக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் சட்ட வரைவாக காணப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி..
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam