சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்!
அவசரகால பயன்பாட்டு உரிமத்தின் கீழ் சீனாவின் "சினோபார்ம்" தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதனையடுத்து உலக சுகாதார மையத்தின் அவசர கோவிட் தடுப்பூசி பட்டியலில் மற்ற ஐந்து தடுப்பூசிகளுடன் சினோபாமும் இணைந்துள்ளது.
கடந்த மாதம் சீனாவிடமிருந்து இலவசமாக பெற்ற 600,000 கோவிட் தடுப்பூசி குப்பிகளை மக்களுக்கு அவசரகால பயன்பாட்டின் கீழ் வழங்க இலங்கை உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்காக காத்திருந்தது.
இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் உள்ளூர் மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கம் வழங்க ஆரம்பிக்கும்.
அத்துடன் ஒவ்வொருவருக்கும் அஸ்ட்ராசெனெகாவைப் போலவே தலா இரண்டு குப்பிகள் கிடைக்கும் என்று மருந்துகள் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.