யாழில் வெள்ளை ஈ தாக்கம்: சுமார் 5,000 தென்னை மரங்கள் பாதிப்பு!
யாழ்பாணத்தில் மாவட்டத்தில் வெள்ளை ஈ தாக்கத்தினால் கிட்டத்தட்ட 5,000 தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தென்னை பயிற்செய்கை சபையின் யாழ். பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (19.04.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தினால் தென்னை மரங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றது.
கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கை
இந்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் அதுவும் யாழ். நகரப் பகுதியில் வைத்தியசாலை வீதியில் வெள்ளை ஈ தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக அதனைக் கட்டுப்படுத்தும் செய்முறைகளைச் செயற்படுத்தினோம்.
ஆனாலும், அது பரவலடைந்து தற்பொழுது யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுகளிலும் பரவி உள்ளதாக அறியக் கிடைக்கின்றது.
தொடர்ச்சியாக இந்த வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
கிட்டத்தட்ட யாழில் 1,500 தென்னை மரங்களுக்கு இந்த கட்டுப்படுத்தல் செயற்திட்டத்தினை மேற்கொண்டுள்ளோம் எனினும் வெள்ளை ஈ தொடர்ச்சியாகப் பரவிக்கொண்டு செல்கின்றது, வெள்ளை என்பது ஒரு வெள்ளை இலையான் எனக் குறிப்பிடலாம்.
வெள்ளை ஈ தாக்கம்
இது நாலு வகைகளில் உள்ளது. இது தென்னையை மட்டும் தான் தாக்கும் இது கூடுதலாக முட்டை போட்டு குழம்பியாக்கி இனப்பெருக்கத்தை அதிகரித்து, தென்னை மரத்தினுடைய அடிப் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் குறிப்பாக செவ்விளனி மரங்களைக் கூடுதலாகத் தாக்குகின்றது.
ஒரு வீட்டில் இரண்டு மூன்று தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கம் ஏற்பாடுமாக இருந்தால் தென்னை வளம் முற்றாகப் பாதிக்கக் கூடிய சாத்திய கூறு காணப்படுகிறது.
வடக்கு மாகாணத்தில் தற்பொழுது தென்னை வளம் சற்று பெருகிக் கொண்டு செல்கின்றது.
எனவே, இந்த வெள்ளை ஈ தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
