பயணக்கட்டுப்பாடுகளை நீக்குவதா இல்லையா - பி.சி.ஆர் முடிவுகளுக்கு அமையவே தீர்மானம்
பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதா இல்லையா என்பது இந்த வாரம் நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளில் பிரதிபலன் கிடைக்க வேண்டுமாயின் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் செல்லும்.
பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்யும் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை என்டிஜன் பரிசோதனையின் பின்னர் விடுவிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
என்டிஜன் பரிசோதனையின் மூலம் சமூகத்தில் ஆபத்தானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இந்த பரிசோதனைகளின் மூலம் கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவியுள்ளதா என்பதை அறிய முடியும் எனவும் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.