அமெரிக்காவில் திடீரென கழன்று விழுந்த விமான சக்கரம்
அமெரிக்காவில் புறப்பட தயாராக இருந்த போயிங் 757 ரக விமானத்தின் டயர் திடீரென கழன்று விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில் விமானத்தில் 184 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்
ஜோர்ஜியா மாகாண தலைநகர் அட்லாண்டாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 'டெல்டா' விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான குறித்த விமானம், கொலம்பியாவின் பகோடா நகருக்கு புறப்பட தயாராக இருந்தது.

இந்நிலையில் கட்டுப்பாட்டு அறையின் சமிக்ஞைக்காக விமானிகள் காத்திருந்த போது விமானத்தின் முன்பக்க டயர்களில் ஒன்று திடீரென கழன்று விழுந்தது. இதனால் அந்த விமானம் அதிர்ந்தது.
விமானத்தின் முன்பக்க டயர் கழன்றதை உணர்ந்த விமானிகள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
விமானத்தில் இருந்த பயணிகளை விமான ஊழியர்கள் பத்திரமாக மீட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri