இறக்குமதி தடை: கோதுமை மா விநியோகஸ்தர்கள் மீது புதிய குற்றச்சாட்டு
அனுமதியற்ற கோதுமை மா இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடையைத் தொடர்ந்து உள்ளூர் கோதுமை மா விநியோகஸ்தர்கள், பில்லியன் கணக்கான ரூபாயில் கணிசமான வருமானத்தை ஈட்டியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் கோப் குழுவின் அண்மைய கூட்டத்தின் போது வெளிப்படுத்தப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இரண்டு நிறுவனங்களும் பெற்றதாகக் கூறப்படும் இலாபங்களின் துல்லியமான அளவைக் கோடிட்டுக் காட்டும் விரிவான அறிக்கையை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி கையிருப்பு

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, உள்நாட்டு கைத்தொழில்களை பாதுகாக்கவும் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும் இறக்குமதி தடையை நிதியமைச்சு அறிமுகப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த இரண்டு நிறுவனங்களும் உயர்ந்த இலாப விகிதத்துடன் இயங்குவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், கோதுமை மா கிலோ ஒன்றுக்கு 35 ரூபாய் வரியுடன் இறக்குமதி செய்தபோதும், அது கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுவது அவதானிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam