இறக்குமதி தடை: கோதுமை மா விநியோகஸ்தர்கள் மீது புதிய குற்றச்சாட்டு
அனுமதியற்ற கோதுமை மா இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடையைத் தொடர்ந்து உள்ளூர் கோதுமை மா விநியோகஸ்தர்கள், பில்லியன் கணக்கான ரூபாயில் கணிசமான வருமானத்தை ஈட்டியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் கோப் குழுவின் அண்மைய கூட்டத்தின் போது வெளிப்படுத்தப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இரண்டு நிறுவனங்களும் பெற்றதாகக் கூறப்படும் இலாபங்களின் துல்லியமான அளவைக் கோடிட்டுக் காட்டும் விரிவான அறிக்கையை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி கையிருப்பு

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, உள்நாட்டு கைத்தொழில்களை பாதுகாக்கவும் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும் இறக்குமதி தடையை நிதியமைச்சு அறிமுகப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த இரண்டு நிறுவனங்களும் உயர்ந்த இலாப விகிதத்துடன் இயங்குவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், கோதுமை மா கிலோ ஒன்றுக்கு 35 ரூபாய் வரியுடன் இறக்குமதி செய்தபோதும், அது கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுவது அவதானிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri