இலங்கையில் முடக்க நிலை நீக்கப்பட்ட பின்னர் என்ன செய்ய வேண்டும்?
நாட்டை திறந்த பின்னர் ஐந்தாவது கொவிட் அலை உருவாவதை தடுக்க பொது போக்குவரத்தினை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வது மிகவும் முக்கியம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்காக உரிய பிரிவுகள் கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என சங்கத்தின் ஊடக குழு உறுப்பினரான வைத்தியர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு 4000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட கால பகுதி ஒன்றை நாங்கள் பார்த்தோம். பாரிய மரணங்கள் ஏற்பட்டு வந்ததமையும் அவதானித்தோம். எனினும் தற்போது தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பெருமளவு குறைந்துள்ளது.
இந்த நிலையில் நாட்டை திறப்பதே சரியான தீர்மானமாக இருக்கும். ஒரு மாதத்திற்கு அதிகமாக நாட்டை மூடி வைத்துள்ளோம். எனினும் அன்றாட உழைப்பில் வாழ்பவர்கள் பாரிய நெருக்கடியை சந்தித்தார்கள். இந்த நிலையில் நாட்டை திறந்தவுடன் மக்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து சரியான முறையில் செயற்பட வேண்டும்.
இரவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதனை விடவும் இரவு நேர கேளிக்கை விடுதிகளை மூடி வைத்து மக்கள் கூடுவதனை தவிர்க்க வேண்டும்.
இரவு நேர பயணங்களை மேற்கொள்வதற்கு அதிக மக்கள் காத்திருக்கும் சந்தர்ப்பத்தில் இரவு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதில் பயனில்லை.
அதற்கு பதிலாக இரவில் இளைஞர்கள் ஒன்றுக்கூடும் கேளிக்கை விடுதிகளை மூடி வைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam