திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 19 பேருக்கு ஏற்பட்ட கதி!
குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 35 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 19 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை குளியாப்பிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இன்று தெரிவித்துள்ளது.
குளியாப்பிட்டி, கரகஹகெதர பிரதேசத்திலுள்ள மண்டபமொன்றில் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போதே 19 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் வைரஸ் தொற்று முற்றாக நீங்கிவிட்டது என்று நினைத்து மக்கள்
செயற்படுவதால் மீண்டும் கோவிட் வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் ஆபத்து
ஏற்பட்டுள்ளது என குளியாப்பிட்டி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி உத்பல
சங்கப்ப (Utpala Sankappa) தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 12 மணி நேரம் முன்
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri