இலங்கையை வந்தடைந்த பாரிய கப்பல்கள் - எரிவாயு விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு
திரவ பெட்ரோலிய எரிவாயுவை (LPG) ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் இன்று காலை (18) நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, எரிவாயு இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், ஒரு எரிபொருள் கப்பலும் இன்று காலை நாட்டினை வந்தடையவுள்ளது.
QR குறியீட்டில் சிக்கல்கள்! கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீண்ட வரிசைகள் - இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு
எரிவாயு கையிருப்பு
நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, மார்ச் மாதத்தில் ஏற்கனவே 38,000 மெட்ரிக் டொன் LPG எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் 33,000 மெட்ரிக் டொன் எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு வந்து சேரும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் எரிவாயு விநியோகத்தை நிலைப்படுத்தி, தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்த எரிவாயு விநியோகம் ஏப்ரல் 21-23 திகதிகளில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சந்தையில் நெருக்கடி ஏற்படுவதற்கான ஆபத்து குறைவு என்றும் உறுதியளித்துள்ளார்.