குற்றப்புலனாய்வுத் துறையில் முறைப்பாட்டை பதிவு செய்த மேல் மாகாண ஆளுநர்
கொழும்பு துறைமுகத்திலிருந்து சோதனைகள் இல்லாமல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக, தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசூப் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டை செய்துள்ளார்.
இது தொடர்பாக இன்று(30) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆளுநர்,
தனது நற்பெயருக்கு ஏற்படும் சேதத்தை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் அமைதியாக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டுகள்
கடந்த சில நாட்களாக, தம்மீது ஆதாரமற்ற மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்றன.
இது தொடர்வதை அடுத்து, இனியும் தாங்கிக் கொள்ள முடியாமல் இன்று குற்றப்புலனாய்வுத்துறையில் முறையிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியடைந்த சில குழுக்கள் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளைச் சொல்லும்போது, தாம் இனியும் அமைதியாக இருக்க முடியாது.
என்றும் மேல் மாகாண ஆளுநர் என்ற முறையில் தமது நற்பெயருக்கு ஏற்படும் சேதத்தை தம்மால் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் ஆளுநர் ஹனிஃப் யூசூப் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
