வெலிகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணியிடை நீக்கம்
வெலிகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு வெலிகம சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பிணை
இது தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பொலிஸ் பொறுப்பதிகாரி தற்போதைக்குப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தற்போதைக்குத் தலைமறைவாக உள்ள நிலையில் அவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவில் வாளுடன் சுற்றித் திரிந்த சீக்கியர்: சுட்டுக் கொன்ற பொலிஸார்: வெளியான வீடியோ! News Lankasri

உக்ரைன் போரை முடிக்க ஐரோப்பிய நாடுகளின் புதிய திட்டம்: Buffer Zone யோசனைக்கு ஜெலென்ஸ்கி மறுப்பு! News Lankasri
