கொழும்பில் களைகட்டிய தைப்பொங்கல் வியாபாரம்! (Video)
தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. உலகில் தமிழர் வாழும் இடங்களில் தைப்பொங்கல் தினம் சிறப்பாக இடம்பெறும்.
அந்தவகையில் கொழும்பில் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளன. கொழும்பின் புறக்கோட்டையில் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மக்கள் அனைவரும் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் பொட்ருகளை கொள்வனவு செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையிலும், கோவிட் நோய் தொற்று வேகமாக பரவ வரும் நிலையிலும், மக்கள் பொருட் கொள்வனவில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எவ்வாறாயினும், நாட்டு மக்களை சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்குமாறு சுகாதார துறையினர் கோரி வரும் நிலையில் மக்கள் அதனை கவனத்தில் கொள்ளாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri