மருதமடு ஆலயப் பகுதியில் தொலைக்காட்சி தொகுப்பாளர் டிரோன் திடீர் மரணம் (Photos)
மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜெகநாதன் உயிரிழந்தமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி ஜெகநாதனின் உடலில் விச ஜந்து ஒன்று தாக்கியதன் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.
இவர் மடுத் திருவிழா கத்தோலிக்க நிகழ்வுகளை நேரலையாகத் தொகுத்து அனுப்பும் பணியை செய்துள்ளார்.
மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புதுக்கமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் டிரோன் (வயது 28) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (13) இரவு எட்டாம் நாள் நவநாள் ஒளிப்பரப்பு நிகழ்வுகளை முடித்துவிட்டு மடுவில் தனது நண்பர்களுடன் இரவு 11 மணியளவில் உரையாடிக் கொண்டிருந்தபோதே இவர் திடீரென மரணித்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதலாம் இணைப்பு
மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் தனது 27ஆவது வயதில் மடுவில் காலமானார்.
கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச் சென்ற நிலையில், நேற்று (13.08.2023) இரவு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மடு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழப்பிற்கான காரணம்
உயிரிழப்பிற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை.
தற்போது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 19 மணி நேரம் முன்

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
