மோட்டார்சைக்கிளில் பயணித்த யுவதிகள் மீது விழுந்த மரம்
முந்தல் 61ஆவது சந்தி பகுதியில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரண்டு யுவதிகள் மீது மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (23.05.2024) பிற்பகல் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த யுவதி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காற்றினால் சரிந்து விழுந்த மரம்
விபத்தில் 23 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
யுவதிகள் இருவரும் வில்பத்து பகுதியிலிருந்து சிலாபம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்று பலத்த காற்றினால் அவர்கள் மீது சரிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |