இலங்கையின் வானிலையில் ஏற்படும் மாற்றம்
இலங்கையின் பல பகுதிகளில் நாளை (26.01.2023) மற்றும் நாளை மறு தினம் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டல திணைக்களத்தின் அறிவிப்பில் மேலும், வங்காள விரிகுடாவில் நிலவும் காலநிலை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் வியாழன் (26) மற்றும் வெள்ளிக்கிழமை (27) பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை 28 மற்றும் 29ஆம் திகதிகளில் மழை குறைவடைவதுடன், ஜனவரி 30 மற்றும் 31ஆம் திகளில் மழை காலநிலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan