மின்சார சபை ஊழியர்களுக்கு புதிய நியமனக் கடிதங்கள் உறுதி! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் அனைத்து உரிமைகளும் புதிய நிறுவனக் கட்டமைப்புக்குள் உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று(13.03.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர் உரிமைகளும் கூட்டு ஒப்பந்தமும்
இச்சந்திப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு,
மறுசீரமைப்புச் செயற்பாட்டின் போது ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளான புதிய நிறுவனங்களில் முறையான நியமனக் கடிதங்களைப் பெறுதல் மற்றும் கூட்டு ஒப்பந்தம் ஆகியன குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தை விரைவாக அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவது குறித்து இணக்கம் காணப்பட்டது.
அரசின் எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தும் வலுசக்தித் துறையை மையமாகக் கொண்டே அமையும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
"நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய காரணியாக வலுசக்தித் துறை மாறி வருகிறது. இந்தச் சவாலை வெற்றிகொள்ள வலுவான நிறுவனக் கட்டமைப்பும், உயர் மட்ட நிதி ஒழுக்கமும் அவசியமானது" என்றும் அவர் மேலும் விளக்கியுள்ளார்.
தொழிற்சங்கங்களின் ஆதரவு
மத்திய கிழக்கின் தற்போதைய போர்ச் சூழல் மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள சவால்களைத் தாம் புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இந்த நேரத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவோ அல்லது அரசுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் வகையிலோ எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று உறுதியளித்தனர்.

மேலும், மறுசீரமைப்புச் செயற்பாட்டைச் சரியான முறையில் நிறைவு செய்வதற்குத் தமது முழுமையான பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளி போன்ற அவசர காலங்களின் போது, மின்சார சபை ஊழியர்கள் காட்டிய அர்ப்பணிப்பான சேவையை ஜனாதிபதி இதன்போது விசேடமாகப் பாராட்டியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் மற்றும் மின்சார சபையின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam