மட்டக்களப்பின் தற்போதைய காலநிலை நிலவரம்
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் வெள்ள நீரும் வெகுவாக கடலை நோக்கி வழிந்தோடி வருகின்றது.
எனினும், படுவாங்கரைக்கும் எழுவாங்கரைக்குமான போக்குவரத்துக்கள் இன்று (29.11.2024) வரையிலும் தடைப்பட்டே உள்ளன.
இந்நிலையில், பட்டிருப்பு, பெரியபோரதீவு பிராதான வீதியில் சூழ்ந்திருந்த வெள்ளம் சற்று வற்றியுள்ளதனால் அவ்வீதியுடாக மக்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஓரளவு போக்குரத்தில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
பதிவாகியுள்ள மழைவீழ்ச்சி
ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் சில சிறியகுளக்கட்டுக்களும் உடைப்பெடுத்துள்ளதுடன், பல வீதிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்களும், வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 6 மணி வரையில் உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 30அடி 4அங்குலம், உறுகாமத்து குளத்தின் நீர்மட்டம் 16அடி 5அங்குலம், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 19அடி 5அங்குலம், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 8அங்குலம், கித்துள்வெவக் குளத்தின் நீர்மட்டம் 12அடி 1அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 5அங்குலம், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12அடி 8அங்குலம், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 30அடி 8அங்குலமாகவும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 1885.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.














உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam