மட்டக்களப்பின் தற்போதைய காலநிலை நிலவரம்
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் வெள்ள நீரும் வெகுவாக கடலை நோக்கி வழிந்தோடி வருகின்றது.
எனினும், படுவாங்கரைக்கும் எழுவாங்கரைக்குமான போக்குவரத்துக்கள் இன்று (29.11.2024) வரையிலும் தடைப்பட்டே உள்ளன.
இந்நிலையில், பட்டிருப்பு, பெரியபோரதீவு பிராதான வீதியில் சூழ்ந்திருந்த வெள்ளம் சற்று வற்றியுள்ளதனால் அவ்வீதியுடாக மக்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஓரளவு போக்குரத்தில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
பதிவாகியுள்ள மழைவீழ்ச்சி
ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் சில சிறியகுளக்கட்டுக்களும் உடைப்பெடுத்துள்ளதுடன், பல வீதிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்களும், வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 6 மணி வரையில் உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 30அடி 4அங்குலம், உறுகாமத்து குளத்தின் நீர்மட்டம் 16அடி 5அங்குலம், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 19அடி 5அங்குலம், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 8அங்குலம், கித்துள்வெவக் குளத்தின் நீர்மட்டம் 12அடி 1அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 5அங்குலம், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12அடி 8அங்குலம், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 30அடி 8அங்குலமாகவும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 1885.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.














வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam