அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ஹர்ஷ டி சில்வா வெளியிட்ட தகவல்
எமது அரசாங்க ஆட்சியில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை 24 வீதத்தினால் அதிகரிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளங்களை ஆறு மாதங்களில் அதிகரிப்பதாக தற்போதைய அரசாங்கம் முன்னதாக கூறிய போதிலும் தற்பொழுது அவ்வாறு செய்ய முடியாது என கூறியுள்ளது.
சம்பளம் அதிகரிக்க முடியாது
தேசிய மக்கள் சக்தியின் செயற்திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படுவது தொடர்பிலான மதிப்பீடுகளை மேற்கொள்ள இன்னும் போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசார மேடைகளில் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை சம்பளங்களை உயர்த்துவதாக தேசிய மக்கள் சக்தி கூறிய போதிலும் தற்பொழுது சம்பளம் அதிகரிக்க முடியாது என கூறி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
