அரசாங்கத்திற்கு தேவையான வகையில் அரசியல் செய்ய முடியாது! நாமல்
அநுர அரசாங்கத்திற்கு தேவையான வகையில் அரசியல் செய்ய முடியாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம்
தமது கட்சி மக்களுடன் மட்டுமே அரசியல் செய்வதாகவும் தற்பொழுது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பொதுஜன முன்னணியுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நிதி அமைச்சின் செயலாளரினால் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமர்ப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகள் உள்ளடங்கிய வரவு செலவுத் திட்டத்தை அவரை விடவும் சிறந்த முறையில் இந்த அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 19 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri