குடிநீருடன் சேரும் கழிவுநீர்: இலங்கை தமிழர் மறியலில்
திருவண்ணாமலை மாவட்டம்- ஆரணியில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம் குடியிருப்பில் கழிவு நீர் புகுந்ததால், அங்கிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக இவ்வாறான சங்கடமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார்.
குடியிருப்பு நீண்ட நாட்களாகப் பழுது பார்க்காமல் இருப்பதால், குடியிருப்புக்குள் நீர் கொட்டுகிறது. குறித்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்காமையால் தொடர் மழையின்போது கழிவுநீர் குடிநீருடன் சேருகிறது.
இதனால் குழப்பமடைந்த இலங்கைத் தமிழர் ஆரணி - வந்தவாசி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த பகுதியில் 108 குடும்பத்தினர் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.