ட்ரோன் கமரா மூலம் சிக்கியவர்களுக்கு எச்சரிக்கை
இராணுவத்தின் வன்னிப் படைத் தலைமையகத்தால் வவுனியாவில் ட்ரோன் கமரா மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா பழைய பேருந்து நிலையில் வைத்து இராணுவத்தால் ட்ரோன் கமரா பறக்கவிடப்பட்டதுடன், இதன்போது நகரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டன.
அத்துடன், மோட்டார் சைக்கிள்களில் வந்த இராணுவ அணியினர் பயண்கட்டுப்பாடு நடைமுறைகளை மீறி நடமாடியவர்களை இனங்கண்டு அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கி அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பியிருந்தனர்.
இதேவேளை, வவுனியா நகரப்பகுதியில் நேற்றைய தினம் (30.05) மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிய நிலையில் நகரப் பகுதி இராணுவத்தின் ட்ரோன் கமராவின் உதவியுடன் கண்காணிப்பட்டு வீதிகளில் நடமாடியவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டு திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
