அடையாள அட்டை நடைமுறை! - மட்டக்களப்பில் பலருக்கும் பொலிஸார் எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் இன்றுபயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து மட்டக்களப்பு நகரில் அதிகளவிலான பொது மக்கள் வீதிகளில் நடமாடியதை தொடர்ந்து பொலிஸாரினால் தேசிய அடையாள அட்டை இலக்கம் பரிசோதனை செய்யப்பட்டு இரட்டை எண்கள் கொண்ட நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
தேசிய கோவிட் தொற்று தடுப்பு செயலணியினால் கடந்த 3 நாட்கள் அமுலில் இருந்த பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின்படி ஒற்றை எண்கள் கொண்ட நபர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பில் அதிகமான மக்கள் வீதிகளில் நடமாடியதை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி கே.பி,ஹொட்டியாராச்சி தலைமையிலான் பொலிஸார் நகர் பகுதி, பொதுச் சந்தை, மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இதன்போது வீதிகளில் பிரயாணித்த மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களை நிறுத்தி தேசிய அடையாள அட்டைகள் எண்கள், முககவசம் அணிந்துள்ளனரான மற்று சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பயணிக்கின்ரார்களா என சோதனையில் ஈடுபட்டனர்,
இதன்போது இரட்டை எண்களில் உள்ளவர்களை பிடித்து அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
இதேவேளை முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் அரசாங்கம் அறிவித்த சட்டதிட்டங்களை ஏற்று அதற்கு ஏற்றவாறு செயற்படுமாறும் அநாவசியமாக மக்கள்
வீட்டை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.