ஹோர்டன் சமவெளிக்கு வருவோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஹோர்டன் சமவெளியில் சட்டவிரோத செயல்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவில் அரிய 'நெலு' மலரைப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்து வரும் நிலையில், பலர் பூங்கா விதிமுறைகளை மீறியதாக அதிகாரிகள் குற்றம் சுமதியுள்ளனர்.
சுமார் 50 பேருக்கு அபராதம்
இந்த நிலையில், பூங்கா விதிகளை மீறுபவர்கள், ஒதுக்க்கப்பட்ட பாதைகளில் இருந்து விலகிச் செல்வவர்கள் அல்லது பூங்காவின் தாவரங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பூங்காவின் கண்காணிப்பாளர் சிசிர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு தேசிய பூங்காவில், பார்வையாளர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை பார்வையிட மாத்திரமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் பாதையை விட்டு வெளியேறுதல், பூக்களைப் பறித்தல் அல்லது விலங்குகளுக்கு உணவளித்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை என சிசிர ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும், சுமார் 50 பேருக்கு அபராதம் விதித்துள்ளதாக சிசிர ரத்நாயக்க கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan