தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்படுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் இன்றைய தினம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிச் செயற்படுவோர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிலர், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறானவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்ததன் பின்னர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது நாட்டில் 122000 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி வீடுகளை விட்டு வெளியேறுவோர் மற்றும் வீடுகளுக்கு வெளிநபர்களை அழைத்து வருவோர் ஆகியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை உச்ச அளவில் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri
