பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வார இறுதி நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் பயணங்களைத் தவிர்க்குமாறு பிரித்தானிய சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய தானியங்கி சேவைகள் நிறுவனமான 'RAC'மற்றும் போக்குவரத்து ஆய்வமைப்பான 'Inrix' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளன.
ஆய்வின் படி, இந்த வாரம் முதல் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் வரை 29. 3 மில்லியன் பேர் சாலைகளில் பயணிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து பராமரிப்புகள்
குறிப்பாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.00 மணிமுதல் இரவு 7.00 மணி வரை போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பிரித்தானியாவில் தற்போது, தொடருந்து பராமரிப்புகள் மேற்கொள்ளப்படுவதால் சாலை வழியாக பயணிப்போரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பயணங்களை முன்கூட்டியே தீர்மானிப்பது நல்லது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
