இலங்கையின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் 18 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுடன் கூடிய மழை தொடா்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் இந்த எச்சாிக்கையை விடுத்துள்ளது.
முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, புத்தளம், பொலன்னறுவை, குருநாகல், மாத்தளை, மட்டக்களப்பு, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மன்னார், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும்.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம். எனவே, பொதுமக்கள் மழை மற்றும் மின்னலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பொதுமக்கள் மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய வேண்டாம என்றும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது நெல் வயல், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு
மைதானங்கள் மற்றும் திறந்தவெளி நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில்
நடமாடுவதைத் தவிர்க்குமாறும் வானிலை மையம் மக்களைக் கேட்டுக்கொள்கிறது.