இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செற்படுத்தத் தவறும் அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
இந்த அறிவுறுத்தல், அமைச்சுத் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் நியதிச் சட்ட அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ், ஆணைக்குழு வழங்கும் பரிந்துரைகளை அரச நிறுவனங்கள் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் செயற்படுத்தி அதற்கான தகவல்களை வழங்க வேண்டியது சட்டப்பூர்வ கட்டாயமாக கருதப்படுகிறது.
கடுமையான நடவடிக்கைகள்
ஆனால், சில நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள், பரிந்துரைகளை புறக்கணிப்பதை ஆணைக்குழு கடுமையாக கண்டித்துள்ளது.
இந்த நிலையில், தமது பரிந்துரைகளை மீறி செயற்படும் அதிகாரிகளும் நிறுவனங்களும் கடுமையான நடவடிக்கைகளை தவிர்க்க முடியாது எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 9 மணி நேரம் முன்

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri

சிரிப்பால் மட்டுமே மக்களை கவர்ந்த காமெடி நடிகர் குமரிமுத்து...கல்லறையில் இப்படியா எழுதியிருக்கு? Manithan

வருங்கால கணவருடன் நெருக்கமான புகைப்படம் வெளியிட்டு திருமண செய்தியை அறிவித்த தான்யா ரவிச்சந்திரன்.. வைரல் போட்டோ Cineulagam

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri
