இந்தியாவை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து! உயிர்பிழைத்தவரின் தற்போதைய நிலை
இந்தியாவை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்துக்கு பிறகு, உடல் மற்றும் மன ரீதியான சிரமங்களை எதிர் கொண்டு வருவதாக குறித்த விபத்தில் உயிர்பிழைத்த நபரான விஸ்வாஸ்குமார் ரமேஷ், தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்திலுள்ள அஹமதாபாத் அருகே கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து 241 பயணிகளின் உயிரைப் பலியாகினர்.
அதிர்ஷ்டசாலி
ஆனால் அந்த விபத்தில் சிக்கிய விஸ்வாஷ்குமார் ரமேஷ் என்பவர், யாரும் எதிர்பார்க்காத வகையில் தெய்வாதீனமாக உயிர்பிழைத்தார்.

லண்டனுக்குப் புறப்பட்ட AI 171 விமானம் தரையில் விழுந்து நொறுங்கியபோது, அதன் சிதைவுகளில் இருந்து விஸ்வாஷ்குமார் ரமேஷ் உயிருடன் வெளியே வந்து அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறையவைத்தார்.
உலக மக்கள் விஸ்வாஷ்குமாரை “அதிர்ஷ்டசாலி” எனக் குறிப்பிட்டு வந்தநிலையில் தற்போது அவர் எப்படி உள்ளார் என்ற கேள்வியும் இருந்தது. இந்தநிலையில், மீள முடியாத துயரில் மூழ்கி, தற்போது கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அவர் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
உடலளவில் ஏற்பட்ட காயங்கள் தன்னை வாகனம் ஓட்டவும், பணியாற்ற முடியாத நிலைக்கும் தள்ளியுள்ள நிலையில், தனது குடும்பத்தாரைப் பிரிந்து தனிமையில் தவித்து வருவதாக விஸ்வாஷ்குமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புபட்டிருக்கும் அரசு தரப்பினர் யார்! சுட்டுக்கொல்லப்பட்ட மற்றுமொரு குற்றக்கும்பல் நபர்
விமான விபத்து
குறிப்பாக விபத்திற்குப் பின் உடல் மற்றும் மன ரீதியாகக் கடுமையாக பாதிக்கப்பட்ட விஸ்வாஷ்குமார் ரமேஷ், தனது மனைவி மற்றும் மகனுடன் பேசுவதைத் தவிர்த்து லெஸ்டரில் உள்ள தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இரவு முழுவதும் விபத்தின் நினைவுகள் தன்னை வாட்டுவதாகத் தெரிவித்துள்ள விஸ்வாஷ்குமார், தனது ஒட்டுமொத்த குடும்பமும் மனதளவில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மன அழுத்த நோய் எனப்படும் PTSD மனநிலைக் கோளாறு விஸ்வாஷ்குமாருக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அவர் இதுவரை அதற்கு உரிய சிகிச்சைப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையால் விஸ்வாஷ்குமாருடைய குடும்ப தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பக்க பலமாக இருந்து வரும் சமூக ஆர்வலர் சஞ்சீவ் படேல் மற்றும் ராட் சீகர் ஆகியோர், ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து போதுமான உதவிகள் கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மன அழுத்தம்
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நெருக்கடியில் உள்ள விஸ்வாஷ்குமார் மற்றும் குடும்பத்தாரை, ஏர் இந்தியா நிறுவனத்தார் நேரில் சந்தித்துத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விஸ்வாஷ்குமாருக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது அவரது உடனடி தேவைகளைப் பூர்த்திசெய்ய போதுமானதாக இல்லை என்றும் விஸ்வாஷ்குமாரின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில், ஏர் இந்தியா நிறுவனமோ தங்கள் உயர் அதிகாரிகள் பலமுறைப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளதாகவும், விஸ்வாஷ்குமாரின் குடும்பத்தைச் சந்திக்க தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
விஸ்வாஷ்குமார் ரமேஷின் வாழ்க்கை அவருக்கு உயிர் பிழைக்க அதிர்ஷ்டத்தை வழங்கியிருந்தாலும், அன்புக்குரிய சகோதரரைப் பறித்து, மன அழுத்தத்தில் போராடும் நிலையை உருவாக்கியுள்ளது.
மேலும் உடல் காயங்கள் குறித்து பேசிய விஸ்வாஸ்குமார் ரமேஷ், தனக்கு கால்கள், தோள்கள், முழங்கால்கள் மற்றும் முதுகில் வலி இருப்பதாகவும், விபத்துக்கு பிறகு வேலை செய்யவோ, வாகனம் ஓட்டவோ முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam