உபவிதிக்கு முரணாக கூட்டம் - தமிழரசுக் கட்சிக்குள் புதிய பிரச்சினை
கடந்த 2025, அக்டோபர் 21 அன்று, காங்கேசன்துறை தொகுதி கிளையின் பழைய உறுப்பினர்களுக்கு தெரியாமல், உபவிதிக்கு முரணாக கூட்டம் இடம்பெற்றதாக காங்கேசன்துறை தொகுதிக்கிளையின் தற்போதைய தலைவர் சா.செ.இளங்கோபனால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் ஆகியோருக்கும், மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் கடிதத்தில்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச் செயலாளரான ஆகிய தங்களின் முன்னிலையில் 21.10.2025 அன்று மாவட்டபுரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிக்கிளை நிர்வாகத் தெரிவுக் கூட்டம் நடைபெற்றதாக ஊடகங்கள் மூலம் அறிகின்றோம்.
புதிய கிளை
கணிசமான தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் தொகுதியில் உள்ள போதும், இக்கூட்டத்தில் வலி-வடக்கு பிரதேச சபையுடன் தொடர்புடைய ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது.

இதனால் இக்கூட்டத்தில் வலி-வடக்கு பிரதேச அபிவிருத்தி தொடர்பான தெளிவின்மையும் தோன்றியுள்ளது.
எப்படியிருப்பினும் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக யாப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட தொகுதிக் கிளை ஒன்று இருக்கும் போது அக்கிளை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் இன்னொரு புதிய கிளை அமைக்கப்பட்டிருக்க முடியாது என்றே நம்புகின்றோம்.
கட்சியின் முக்கியஸ்தர்கள்
இலங்கை தமிழரசுக் கட்சியின் கங்கேசன்துறைக் கிளையின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு என்ற பொறுப்புடன் 2025, ஒக்டோபர், 21ஆம் திகதி நடாத்தப்பட்டதாக கூறப்படும் நிர்வாகத் தெரிவு கட்சியின் யாப்பிற்கு அமைவாக நடாத்தப்படவில்லை என்றும் அதன் காரணமாக அது செல்லாது என்பதையும் கட்சியின் யாப்பின் படி தேர்தல்கள் தடைபெறும் வரை கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிக் கிளையின் நிர்வாகமாக 02.12.2023 அன்று தெரிவான உறுப்பினர்கள் தொடர்ந்து செயற்பட எம்மை தேர்ந்தெடுத்த மூலக்கிளை உறுப்பினர்களுக்கும் அந்தத் தெரிவின் போது கலந்துகொண்ட கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் கடமைப்பட்டுள்ளோம்.

யாப்பை மீறும் செயற்பாடுகள் கட்சிக்குள் மேலும் நெருக்கடியை அதிகரிக்கும். அத்துடன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை மறியாதையுடன் சமர்பிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் தொடர்பாக சாதகமான பதில் இல்லை எனில் இன்னொரு வழக்கு தமிழரசுக் கட்சி பதில் தலைவர், பதில் செயலாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புபட்டிருக்கும் அரசு தரப்பினர் யார்! சுட்டுக்கொல்லப்பட்ட மற்றுமொரு குற்றக்கும்பல் நபர்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam