ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானுக்கான தனது 3 நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (24) இலங்கையை வந்தடைந்ததையடுத்து அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஜனாதிபதி ரைசியின் பாகிஸ்தான் விஜயத்தின் போது, ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் ஈரானுக்கிடையில் ஒப்பந்தங்கள்
இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி இன்று இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இலங்கை மற்றும் ஈரானுக்கிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |