மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
மேல் மாகாணத்தின் கீழ் உள்ள 31 மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து துணை மருத்துவ நிபுணர்களும்,எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
கடுமையான முறைகேடுகள் மற்றும் பரவலான ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் செயல்படுத்த அறிவுறுத்தியுள்ள இடமாற்ற உத்தரவுகளுக்கு எதிராகவே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒரு வருடத்திற்கும் மேலாக
இடமாற்ற உத்தரவுகள் நாளை 18 ஆம் திகதியன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை மையப்படுத்தியே 19ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், எந்தவொரு பொறுப்பான அதிகாரியும் இந்த விடயத்தைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று துணை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்/
இந்த தொழிற்சங்க நடவடிக்கையில்; கதிரியக்க நிபுணர்கள், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், பிசியோதெரபிஸ்டுகள், பேச்சு சிகிச்சையாளர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் உட்பட ஏழு வகை துணை மருத்துவ நிபுணர்கள் ஈடுபடவுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam