இலங்கையின் குடும்ப கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! பேராயரின் பரபரப்பான தகவல்..
இலங்கையில் குடும்ப கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதால் இன்றைய மனித சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அழிவு இதுவாகும் என கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை லூர்து அன்னை ஆலயத்தின் 117ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடரந்து பேசிய அவர்,
எளிதாக எடுத்துக் கொள்ளப்படும் திருமண பந்தம்
இலங்கையில் குடும்ப அமைப்பு சீர்குலைவது தற்போது ஆபத்தான தொற்றுநோயின் பரவி வருகிறது. உணர்ச்சி, வெளிப்புற அழகு அல்லது ஈர்ப்பு போன்ற காரணிகளால் ஆழ்ந்த சிந்தனை இன்றி பல தம்பதிகள் திருமணத்தில் இணைந்து, குறுகிய காலத்திலேயே அந்த உறுதிப்பாட்டை கைவிடும் நிலை அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாம் வாழும் காலத்தின் மிகப்பெரிய அழிவு குடும்ப வாழ்க்கையை சீர்குலைக்கும் இந்த போக்காகும். இலங்கையிலும் இது ஆபத்தான முறையில் தொற்று நோயைப் போல பரவி வருகிறது.

திருமணம் என்பது எந்தப் பொறுப்புணர்வும் இன்றி ஒரு விளையாட்டாகக் கருதப்படும் நிலை இந்நாட்டில் உருவாகியுள்ளது. திருமணம் என்பது எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடிய விடயம் அல்ல.
அது சமூகத்தின் அடித்தளம் ஆகும். வெற்றிகரமான திருமணம் வலுவான குடும்பத்தை உருவாக்கும். வலுவான குடும்பம் பரந்த சமூக அமைப்பையும் உறுதியாக்கும் என அவர் குறிப்பிட்டார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam