வாக்னர் கூலிப்படையை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது பிரித்தானியா
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையை தீவிரவாத அமைப்பாக அறிவித்து உத்தியோகப்பூர்வமாக தடை செய்வதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
செப்டெம்பர் 6 ஆம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2022ல் ரஷ்ய சிறைக் கைதிகளை தமது குழுவில் இணைத்துக்கொண்ட பிரிகோஜின் 25,000 பேரை உறுப்பினர்களாக குறிப்பிட்டிருந்தார்.
வாக்னர் கூலிப்படையின் தீவிரவாத பட்டியல்
இந்நிலையில் ரஷ்யாவின் விமான விபத்தில் வாக்னர் கூலிப்படையின் நிறுவனர் யெவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்த நிலையில், வாக்னர் கூலிப்படையின் எதிர்காலம் நிச்சயமற்றதாக கருதப்பட்டது.
இதற்கமைய, 2023 ஜனவரில் வாக்னர் கூலிப்படையை நாடு கடந்த குற்றவியல் அமைப்பு என அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேலும், ஐரோப்பிய நாடுகள் பல வாக்னர் கூலிப்படையை தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
