அமெரிக்க நீதிபதி அதிரடி உத்தரவு: ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக திரும்பிய தீர்ப்பு
அமெரிக்க நீதிபதி, கடந்த ஆண்டு மூடப்பட்ட வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (VOA) வானொலியை மீண்டும் திறக்கும்படி ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான VOA பத்திரிகையாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராய்ஸ் லேம்பர்ட் தீர்ப்பளித்தார்.
ஒரு வார கால அவகாசம்
நீதிமன்றம், இந்த சர்வதேச ஒலிபரப்பை மீண்டும் ஒளிபரப்பிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

VOA வானொலி இரண்டாம் உலகப் போரின் போது நாஜி பிரச்சாரத்தை முறியடிக்க நிறுவப்பட்டது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் பதவியேற்ற சில வாரங்களில், இந்த வானொலியை இடதுசாரி சார்புடையதாகக் குற்றம் சாட்டி மூட ஒரு நிர்வாக உத்தரவிட்டார்.
அதேவேளை, ரேடியோ ஃப்ரீ யூரோப் மற்றும் ரேடியோ ஃப்ரீ ஏசியா போன்ற ஊடகங்களையும் “பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க அதிகபட்ச அளவிற்கு நீக்குமாறு” ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri