மத்திய கிழக்கு பதற்றம்! இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலைமை காரணமாக இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டினருக்கான விசா காலத்தை 14 நாட்களுக்கு நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக 28 ஆம் திகதி முதல் விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால், நாட்டை விட்டு வெளியேற திட்டமிடப்பட்டிருந்த சில வெளிநாட்டினர் தங்கள் விசாக்கள் காலாவதியானதால் வெளியேற முடியாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான பயணங்கள் இரத்து
இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, பெப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கிற்கான விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்குக் கட்டணமின்றி விசா நீடிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதேவேளை, மாற்றுப் பயண ஏற்பாடுகளை செய்ய அவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்குவதே இதன் நோக்கமாகும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam