இலங்கை ரசிகரை சந்தித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி மற்றும் தற்போதைய ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பு திறன் கொண்ட இலங்கை கிரிக்கெட் ரசிகரான கயான் சேனாநாயக்கவை சந்தித்தார்.
2022ம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண தொடர் தற்போது துபாயில் இடம்பெற்று வருகின்றது. இதன்படி நேற்றைய தினம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மிகவும் விறுவிறுப்பான போட்டி இடம்பெற்றிருந்தது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்றிருந்தது. மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தின் இறுதி இந்திய அணி பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியைப் பெற்றது.
இந்த போட்டி இடம்பெற்று ஒரு நாள் கழித்து இன்றைய தினம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கயான் சேனாநாயக்கவை சந்தித்தனர். கயான் சேனாநாயக்க விராட் கோலியின் திருமண வரவேற்பு நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
