மே மாதத்தில் தமிழரின் கண்ணீராய் கவிப்பேரரசுவின் தமிழீழக்காற்றே
மே மாதத்தில் தமிழரின் கண்ணீராய் கவிப்பேரரசுவின் தமிழீழக்காற்றே பாடல் வெளிவந்திருக்கிறது.
கவிப்பேரரசு வைரமுத்து எப்போதும் தமிழைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்பவர்.
எமது மக்களின் உரிமைக்காக அவரின் விரல்கள் எழுத மறந்ததில்லை. அதற்கான ஆதாரங்கள் பல அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதோ இப்போது “நாட்படுதேறல்” எனும் அவரின் நவீன முயற்சியான தமிழ்த் தேற்றலில் முதல் பதின் மூன்று பாடல்களில் நான்காவது பாடலாக தமிழீழக் காற்றே பாடல் வெளிவந்திருக்கிறது.
தமிழர் போராட்டம் இரத்தத்தாலும்,கல்லறைகளாலும் மெளனிக்கப்பட்ட இந்த மே மாதத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள், தம் உறவுகளைப் பிரிந்து வாடும் சோகத்தை இலக்கியமாக்கிப் படைத்துள்ள இந்தப் பாடலானது தமிழர் வரலாற்றை,தமிழின் வரலாறு பதிவு செய்த பாடலாக வெளிவந்ததானது நன்றிக்கும், வணக்கத்துக்குமுரியது.
நாட்படு தேறலில் வாரம் ஒரு பாடல் கலைஞர் தொலைக்காட்சியிலும்,யூரியூப்பிலும் வெளிவருகிறது, மூன்றாவதாக வெளிவந்த மேற்குத் தொடர்ச்சிமலை..... பாடலில் கவிப்பேரரசு தாமே தோன்றியதானது, கவியரசு கண்ணதாசனுக்கு ஒரு பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது..... எனும் பாடலுக்குரிய தனித்துவத்தை கொடுக்கிறது.
தமிழீழக் காற்றே பாடலில் நந்திக்கடல் வரும்போது விம்மாமலும், கதறாமலும் இருக்க இதயமுள்ள எவராலும் முடியாது, கவிப்பேரரசே எங்களின் நன்றிகள் என்பின்றனர் புலம்பெயர் தமிழர்கள்.