தென்னிலங்கையில் மரண சடங்கினால் தனிமைப்படுத்தப்பட்ட கிராமம்
தென்னிலங்கையில் நடைபெற்ற மரண சடங்கிற்கு சென்ற 54 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயாகல, ஹொரகஸ்கெலே கிராம சேவகர் பிரிவில் மரண வீட்டிற்கு சென்ற 63 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் 54 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட கிராம சேவர் பிரிவினை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கொவிட் தடுப்பு செயலணி, சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்றாளர்களுடன் நெருங்கி செயற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மரண வீட்டிற்கு சென்று கொரோனா தொற்றாத ஏனைய 9 பேரும் கொவிட் தடுப்பூசி செலுத்தியதாக தெரியவந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொவிட் தொற்று வேகமாக பரவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri