தென்னிலங்கையில் மரண சடங்கினால் தனிமைப்படுத்தப்பட்ட கிராமம்
தென்னிலங்கையில் நடைபெற்ற மரண சடங்கிற்கு சென்ற 54 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயாகல, ஹொரகஸ்கெலே கிராம சேவகர் பிரிவில் மரண வீட்டிற்கு சென்ற 63 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் 54 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட கிராம சேவர் பிரிவினை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கொவிட் தடுப்பு செயலணி, சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்றாளர்களுடன் நெருங்கி செயற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மரண வீட்டிற்கு சென்று கொரோனா தொற்றாத ஏனைய 9 பேரும் கொவிட் தடுப்பூசி செலுத்தியதாக தெரியவந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொவிட் தொற்று வேகமாக பரவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri