விஜய் - காங்கிரஸ் இணைவு! கொந்தளிக்கும் ஈழத்தமிழர்களின் முடிவு சரியா..
பல தடைகளையும் தாண்டி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ளதுடன் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் நேற்றையதினம்(11) பதவியேற்றுள்ளார்.
இந்தநிலையில் முதலமைச்சர் விஜய் இந்தியா மட்டுமன்றி பல தமிழ் பேசு மக்கள் உள்ள நாடுகளில் பேசுபொருளாகியுள்ளார்.
அதிலும் இலங்கையில் பல இரசிகர்கள் உள்ள நிலையில் தற்போது அது அரசியலாக மாறியுள்ளது.
இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் உறவு இனி எவ்வாறிருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தநிலையில், முதலமைச்சராவதற்கு விஜய் - காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தமையை ஈழத்தமிழர்கள் பலர் கண்டித்துள்ளனர்.
புலம்பெயர் நாட்டு மக்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அது தொடர்பில் பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தனது கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
தளபதி விஜய் முதல்வராகிவிட்டார் - இது மாபெரும் தியாகத்தினுடாக பெறப்பட்ட வெற்றியாகும்! என தமிழர் விடுதலைக் கூட்டணி